வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!
9 Apr 2026, 5:30 am
<p><strong>வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!</strong></p><p>பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார், தனது தீவிர வாக்குசேகரிப்பின் போது விவசாயிகளின் நலன் காக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக பாலக்கோடு பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.</p><p>இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், பாசன வசதிகளை மேம்படுத்தவும், ஏரி குளங்களை தூர்வாரவும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தனது பிரச்சாரத்தின் போது உறுதிபடத் தெரிவித்தார்.</p>
