ஆப்கனில் 1.3 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர்
12 May 2026, 11:58 pm
<p><strong>ஆப்கனில் 1.3 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர்</strong></p><p>காபூல், மே 12 - ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. </p><p>அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பாகிஸ்தானுடன் ஏற்படும் மோதல், போர்ப் பதற்றங்கள் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கப் பயன்படுத்தப்படும் சத்தான உணவுப் பொருட்களின் விநியோகம் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் உதவி வழங்கும் பணிகளைப் பாதித்துள்ள தாகவும் உலக உணவுத் திட்டம் கவலை தெரிவித்துள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 1.38 கோடி மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். மேலும், சுமார் 50 லட்சம் குழந்தைகளும், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.</p>
