தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது! திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

2 Apr 2026, 5:30 am
தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது! திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
<p><strong>தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது! திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஏப். 1 - &#39;ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டின் பெயரையே &#39;தட்சிண பிரதேஷ்&#39; என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்&#39; என்றும், &#39;இந்த ஆபத்தைத் தடுக்க ஒட்டுமொத்தத் தமிழரும் பாதுகா - அதிமுக கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும்&#39; என தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், அதிமுக-வின் துரோகத்தையும் பாஜக-வின் தமிழக எதிர்ப்பு அரசியலையும் கடுமையாகச் சாடினார்.</p><p>அதிமுகவை அடிமைக் கூட்டமாக்கிய பழனிசாமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடிய முதலமைச்சர், தன்னுடைய பதவி சுகத்தையும் பாதுகாப்பையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார். மக்கள் நலனை விட தனது சுயநலமே அவருக்கு முக்கியம் என்று குற்றம் சாட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.