தீக்கதிர் முக்கிய செய்திகள்
4 Jul 2026, 8:12 pm
<p>சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்</p><p>விழிஞ்ஞம் துறைமுகமானது கேரள அரசின் விஐஎஸ்எல் - அதானியின் ஏவிஐபிபிஎல் இடையே போடப்பட்ட பொது-தனியார் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேரள அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல், ஏவிஐபிபிஎல் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை ரூ.13,000 கோடிக்கு அதானி குழுமம் கைமாற்றியுள்ளது. இது பகற்கொள்ளை அன்றி வேறொன்றுமில்லை.</p><p><strong>சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி</strong></p><p>அயோத்தி முறைகேடு யாருடைய அதிகாரத்தின் கீழ் நடந்தது? ஒன்றிய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில்,”ராமர் கோவில் அறக்கட்டளையின் எந்தவொரு முடிவுகளிலும் எங்களால் தலையிட முடியாது; அரசாங்கமோ அல்லது நீதிமன்றங்களோ இதில் தலையீடு செய்ய முடியாது’ என்று கூறியுள்ளது. அப்படியென்றால் இந்த முறைகேட்டுக்கு யார் பதில் கூறுவார்கள்.</p><p><strong>காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்தேவ் பகத்</strong></p><p>அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்துள்ள எதிர்வினை மிகவும் காலதாமதமானது. ஆர்எஸ்எஸ் அறிக்கை மோடி அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பணிந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. </p><p><strong>பைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கம்</strong></p><p>ஒரு இடத்தில் விரும்பத்தகாத விஷயம் நிகழ்ந்தால் பிரதமர் மோடி அங்கு செல்ல மாட்டார். மணிப்பூர் மாநிலத்திற்கு மோடி செல்லாததே இதற்கு சாட்சி. அப்படியென்றால் மோடி இனி முறைகேடு நடந்த ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டாரா?</p><p><br></p><p><br></p>
