அஜித்குமாரின் தாயார் காலமானார்: முதல்வர் - திரைக்கலைஞர்கள் இரங்கல்
30 May 2026, 9:35 pm
<p><strong>அஜித்குமாரின் தாயார் காலமானார்: முதல்வர் - திரைக்கலைஞர்கள் இரங்கல்</strong></p><p>சென்னை, மே 30 - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (மே 30) அன்று சென்னையில் காலமானார்.</p><p>தெலுங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்ட அஜித்குமார், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு தமிழ்நாட்டிலேயே குடியேறினார்.</p><p>சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2023 ஆம் ஆண்டு தந்தை பி.எஸ். மணி காலமான நிலையில், தற்போது தாயாரையும் இழந்திருப்பது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>முதலமைச்சர் இரங்கல் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இரங்கலில், “வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.</p><p>அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன்” என்று இரங்கல் தெரிவித்தார்.</p><p> திரை உலகப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>
