அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சிக்கு நடவடிக்கை
12 Jun 2026, 5:30 am
<p><strong>அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சிக்கு நடவடிக்கை</strong></p><p>சென்னை, பிப். 24: அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.</p><p>இந்தத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.</p><p>மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.</p>
