கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை
22 Dec 2025, 2:53 pm
<p>கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை</p>
<p>தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க கோரி மாற்றுத்திறனாளி இளம்பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கீழமங்கலம், தெற்கு தெருவைச் சேர்ந்த சுடலை மணி மகள் கற்பகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “பிகாம் பட்டதாரியான நான், கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனக்கு மூன்று சக்கர வாகனம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்க கோரியுள்ளார். .</p>
