தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வன்முறையை வைரலாக்கும் சமூகம்!

31 Dec 2025, 3:37 pm
                 வன்முறையை வைரலாக்கும் சமூகம்!
<p><strong>வன்முறையை வைரலாக்கும் சமூகம்!</strong></p> <p>திருத்தணியில் நடந்த கொடூரமான தாக்கு தல் சம்பவம் நம் சமூகத்தின் முன் பல கேள்வி களை நிறுத்தியிருக்கிறது. ஒடிசாவைச் சேர்ந்த &nbsp;இளைஞர் சூரஜ் மீது நடத்தப்பட்ட இந்த வன் முறை, வெறும் ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல; இது நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பல &nbsp;நோய்களின் அறிகுறி.</p> <p>சக மனிதனை மனிதனாகப் பார்க்கவிடா மல் தடுப்பதில், &ldquo;நாம்&ndash;அவர்கள்&rdquo; எனப் பிரித்துப் &nbsp;பேசும் பிரிவினைவாதக் கொள்கைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. இத்தகைய வெறுப்புப் பேச்சு கள் இளைய தலைமுறையினரின் மனதில் நஞ் &nbsp;சாகப் பாய்கின்றன. பாதிக்கப்பட்டவர் &ldquo;வட மாநிலத்தவர்&rdquo; என்பதற்கு முன்பாக அவர் ஒரு &nbsp;தொழிலாளி, ஒரு மனிதர். குடும்பச் சூழலால் தன் &nbsp;மாநிலத்தை விட்டு வெளியேறி, உயிர்வாழ்வதற் &nbsp;காகச் சிறுசிறு வேலைகள் செய்து பிழைத்துக் &nbsp;கொண்டிருந்தவர் அவர். நாமும் வேலைக்காக &nbsp;வேறு மாநிலங்களுக்கோ, நாடுகளுக்கோ செல் &nbsp;லும் போது நாமும் அங்கே ஒரு தொழிலாளி தானே? அப்போது நம்மை இழிவுபடுத்தினால் நாம் எப்படி உணர்வோம்?</p> <p>&ldquo;வடக்கன்&rdquo; என்று யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்று சொல்லும் அதே மூச்சில், &ldquo;புள் ளிங்கோ&rdquo; என்றாலோ அல்லது &ldquo;வடசென்னை&rdquo; என்றாலோ இப்படித்தான் இருப்பார்கள் என்று &nbsp;முத்திரை குத்துகிற போக்கு சமமாக ஆபத்தா னது. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் &nbsp;அல்லது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் என்று மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் இந்த மனநிலையே எல்லா வன்முறைகளுக்கும் அடிப்படை.</p> <p>இச்சம்பவத்தில் சமூக வலைதளப் போதை யும் &ldquo;ரீல்ஸ்&rdquo; ரவுடியிசமும் மிகக் கவலைக்குரிய விஷ யங்கள். தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் &ldquo;கெத்து&rdquo; காட்ட நினைத்த சிறார்களின் மனநிலை அச்சமூட்டுகிறது. வன் &nbsp;முறையை ஒரு கொண்டாட்டமாக மாற்றும் இந்த &nbsp;ரீல்ஸ் கலாச்சாரம், சிறுவர்களைக் குற்றவாளி களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. எளிதில் கிடைக்கும் மது, கட்டுக்கடங்காமல் பெருகும் &nbsp;போதைப்பொருள்கள், வன்முறையைக் கொண் &nbsp;டாடும் திரைப்படங்கள், சமூக வலைதளங்களில் &nbsp;கட்டுப்பாடின்மை இவையெல்லாம் சேர்ந்து ஒரு விஷச் சூழலை உருவாக்கியிருக்கின்றன.</p> <p>காவல்துறை இத்தகைய வன்முறையா ளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். குறிப்பாக, சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வலம் வரும் &ldquo;மினியேச்சர் ரவுடி களை&rdquo; ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் இருந்து &nbsp;இடைநின்ற மாணவர்களைக் கண்காணிப்ப தற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்கள் அரசுக்கு அவசியம்.</p> <p>நாம் வாழும் இந்த நிலம் அனைவருக்கும் பொதுவானது. உழைக்க வந்தவரை ஊனப் படுத்துவது நமது அறமல்ல. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத் &nbsp;தப்பட வேண்டும். மனிதநேயம் மங்கி, வன்முறை &nbsp;போதையாக மாறும் சமூகத்தில் எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை அரசும், அனைத்து மக்களும் உணர வேண்டிய தருணம் இது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.