பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
19 Mar 2026, 3:18 pm
<p><strong>பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு</strong></p>
<p>சேலம், மார்ச் 19- தாய்லாந்தில் நடைபெற்ற பூப் பந்து போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீரருக்கு ஜங்ஷன் ரயில் நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சந்திப்குமார். பூப்பந்து விளையாட்டு வீரரான இவர், தாய்லாந்து நாட்டில் நடை பெற்ற போட்டியில் பங்கேற்றார். தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதியில் ஆசிய பூப்பந்து கூட்ட மைப்பு சார்பில் இந்தியா தாய்லாந்து டெஸ்ட் சீரிஸ் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பெற்றது. ஆண்கள் மற்றும் பெண் கள் என இரு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் தாய் லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய சந்திப் குமார், ரயில் மூலம் வியாழனன்று சேலம் வந்த டைந்தார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவருக்கு குடும்பத்தி னர், கிராம மக்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆகியோர் பூங்கொத்து வழங்கி உற்சாக வர வேற்பு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர் களை சந்தித்து பேசிய சந்திப் குமார் கூறும்போது, கிரிக்கெட் போட்டிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல் பூப்பந்து விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். நான் அரசு பள்ளியில் படித்தேன்; ஆசிரியர்க ளின் உதவியால் தான் பயிற்சி பெற்று இந்த வெற்றியை அடைந் தேன். மேலும் ஆதரவு கிடைத்தால் நாங்களும் இன்னும் உயரத்திற்கு செல்ல முடியும் என்று தெரிவித் தார்.</p>
