கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை
22 Dec 2025, 4:47 am
<p>கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமனத்தம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால் புதிய தார் சாலையாக சீரமைத்து தர வேண்டுமென சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் அவர்களிடம் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .</p>
