கிராமத்தில் வெளியிட்ட புத்தகம்
16 Jan 2026, 3:00 pm
<p><strong>கிராமத்தில் வெளியிட்ட புத்தகம்</strong></p>
<p>தருமபுரி ஜன-16, புத்தக வெளியீடு பெரும் பாலும் நகரத்தில் உள்ள அரங்குகளில் வெளியிட்டு வரும் நிலையில், திருமால் செல்வன் அவர்கள் எழுதிய “சேவின் கரும்பாறை” என் கிற சிறுகதை புத்தக வெளி யீடு அரூர் வட்டம் அண்ணா நகர் எனும் சிற்றூரில் நடை பெற்றது. தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா குபே ரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு பேசி னார். இவ்விழாவினை வல்லரசு முத்துகுமார் எழுமலை உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். புதிய முயற்சியாக நகரங்களில் வெளியி டும் நிலையை மாற்றி எந்த மக்களுக்காக எழு தப்பட்டதோ அந்த கிராமத்திலேயே வெளியிட்டது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு ஆகும். நிகழ்ச்சியில் ஆண்டி குபேரன், குறும்பட இயக்குநர் சாமி, உதவி ஆய்வாளர் முத்துகு மார், பாவேந்தர் சிவநேசன் உள்ளிட்ட வர்கள் கலந்துகொண்டனர்.நூலாசிரியர் திருமால் செல்வன் ஏற்புரை வழங்கினார்.</p>
<p> </p>
