தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.930 கோடி காவிரி குடிநீர்த் திட்டம், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்!

12 Apr 2026, 5:30 am
ரூ.930 கோடி காவிரி குடிநீர்த் திட்டம், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்!
<p><strong>ரூ.930 கோடி காவிரி குடிநீர்த் திட்டம், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்!</strong></p><p>அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி. ஒட்டன்சத்திரம், ஏப்.11- ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் - அமைச்சருமான அர. சக்கரபாணி, புதூர், தேவதானூர், கொத்தையம், போளுவப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>ஐந்தாண்டு வளர்ச்சிப் பணிகள். அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.</p><p>ரூ. 930 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ரூ. 22 கோடி மதிப்பிலான விருப்பாச்சி அறிமுகக் கல்லூரி, ரூ. 6 கோடி மதிப்பிலான ஒட்டன்சத்திரம் புதிய அரசு தொழிற்பயிற்பி நிலையம் ஆகியவற்றை ஆட்சியின் சாதனைகளாக முன்வைத்தார். தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்த பல்வேறு திட்டங்களையும் அவர் நினைவுபடுத்தினார்.</p><p>இதுவரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி தொடர வேண்டுமெனில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.