புதிய கட்டிடத்தை திறந்து வைத்த 8 ஆம் வகுப்பு மாணவி
18 Feb 2026, 3:04 pm
<p><strong>புதிய கட்டிடத்தை திறந்து வைத்த 8 ஆம் வகுப்பு மாணவி</strong></p>
<p>திருப்பூர், பிப்.18- திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை அதே பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி 13 ஆவது வார்டு அனுப்பர்பாளை யம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. இதில், இப்பள்ளி யில் 8 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவி வாசுகி புதிய கட்டி டத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
