சேலம் அருகே அரசுப்பேருந்து ஏற்படுத்திய விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!
20 Mar 2026, 8:22 am
<p>சேலம் மாவட்டத்தில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள சூளைமேடு பகுதியில், ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.<br />
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தையும் இருசக்கர வாகனத்தையும் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.<br />
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 மாத குழந்தை உட்பட மேலும் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.<br />
இந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
