பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை உறுப்பினர் - மாநிலங்களவை தலைவர் அங்கீகாரம்
27 Apr 2026, 12:47 pm
<p>ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்தார்.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த ராகவ் சதா, அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், விக்ரம்ஜித் சாஹ்னி, ஸ்வாதி மாலிவால் மற்றும் ராஜிந்தர் குப்தா ஆகிய 7 எம்பிக்கள் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில், 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்துள்ளார். இதன்மூலம், மாநிலங்களவையில் பாஜக எம்.பி-க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.</p><p>தற்போது, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் பஞ்சாப்பில் ஒருவரும், தில்லியில் இருவர் என மொத்தம் 3 பேர் மட்டுமே உள்ளனர்.</p><p><br></p>
