தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை 53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை

11 May 2026, 10:12 pm
கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை  53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை
<p><strong>கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை 53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை </strong></p><p>தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளி யிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான தரவு களின்படி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான தினக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள் ளது தெரியவந்துள்ளது.</p><p> 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்தம் 1,70,746 தற்கொலைகளில், 52,910 தினக்கூலித் தொழிலா ளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். </p><p>இது நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மொத்த நபர்களில் சுமார் 31 சதவிகிதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 22,113 இல்லத்தரசிகள், 20,184 இதர நபர்கள், 17,886சுயதொழில் செய்பவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.</p><p> 2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலித் தொழி லாளர்கள் 28 சதவிகிதமாக இருந்தனர். </p><p>கடந்த பத்தாண்டுகாலத் தரவுகளை ஒப்பிடும்போது தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஆகிய மூவருமே தற்கொலை செய்து கொள்ளும் அளவு அதிகரித்து வருகின்றது. </p><p>2015 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை 17.8 சதவிகித மாக இருந்தது. </p><p>இந்த அளவு 2019 இல் 23.4 சதவிகிதமாக வும், 2024 இல் 31 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. </p><p> தமிழ்நாடு முதலிடம் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, தினக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. </p><p>தேசிய அளவில் தற்கொலை செய்து கொண்ட ஐந்து தினக்கூலி தொழி லாளிகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார். </p><p>தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. </p><p>தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 95 சதவீதத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறை வாக வருமானம் ஈட்டுபவர்கள் என்பது வேதனையான விஷயம். </p><p>குறிப்பாக அதில் 62.9 சதவிகிதத்தினர் அதாவது 1,07,455 நபர்கள் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள். </p><p>இவர்கள் பெரும்பாலும் கடன் தொல்லை, வேலை யின்மை, வறுமை போன்ற குடும்பப் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.