தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

27 Dec 2025, 6:08 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
<p><strong>ஜன.1 முதல் ரயில் நேர மாற்றம்</strong></p> <p>உடுமலை, டிச.27- ரயில் எண் 16722 மதுரை யில் இருந்து கோயம்பத் தூர் தினசரி முற்றிலும் முன்ப திவில்லா விரைவு ரயில், &nbsp;ரயில் நிலையங்களுக்கு வரும் விபரம்: மதுரை : &nbsp;காலை 7:05க்கு பதிலாக 7:10 புறப்படும், கூடல் நகர்:7:19, சமயநல்லூர்: 7:28, &nbsp;சோழவந்தான்:7:37, வாடி பட்டி: 7:45, கொடைகானல் ரோடு: 7:55, அம்பாத்துரை: 8:09, திண்டுக்கல் : 8:22, &nbsp;அக்க ரைப்பட்டி :8:37, ஒட்டன்சத்தி ரம்:8:54, சத்திரப்பட்டி :9:07, &nbsp;பழனி : 9:27க்கும் பின்னர் &nbsp; புஷ்பத்தூர்:9:41, மடத்துக் குளம் :9:49, மைவாடி :9:55, &nbsp;உடுமலைபேட்டை :10:08, கோமங்களம் :10:21, பொள் ளாச்சி: 10:37, கிணத்துக்க டவு: 11:04, போத்தனூர் : 11:39 &nbsp;கோயம்பத்தூக்கு மதியம்: 12:15 க்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>கிடப்பில் போடப்பட்டுள்ள உடுமலை நகராட்சி விரிவாக்கம் </strong></p> <p>உடுமலை, டிச.27- உடுமலை &nbsp;ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க &nbsp;வேண்டும் என்ற கோரிக்கை நடைபெறாத காரணத்தால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் &nbsp;குற்றம் சாட்டுகின்றனர். உடுமலை ஊராட்சி ஒன்றியம் 1962 ஆம் ஆண்டு உருவாக் கப்பட்டது. &nbsp;இதில் 38 ஊராட்சிகள் 110க்கும் மேற்பட்ட சிறிய &nbsp;கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் என &nbsp;அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக &nbsp;உள்ளது. உடுமலை நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக நகர்மன்றத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது, நடைமுறைக்கு வராமல் &nbsp;உள்ளது. அதே போல் உடுமலை ஒன்றியத்தை நிர்வாக வச திக்கும், ஊராட்சிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தவும் ஒன்றியப்பகுதியை இரண்டாக பிரிக்கும் திட்டத்திற்கு, பொது &nbsp;மக்கள் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்புக்கூட்டம் கடந்த &nbsp;2014 ல் நடைபெற்றது. இதுவும் நடைமுறைக்கு வரவில்லை. &nbsp;எனவே நிர்வாக நடைமுறைக்கும் கிராமங்களின் வளர்ச்சிக் கும் பெரிதும் உதவும் வகையில் உடுமலை ஒன்றிய விரி வாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p> <p>த<strong>டை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் &nbsp;விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம்</strong></p> <p>திருப்பூர், டிச.27- திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5 &nbsp;கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு &nbsp;முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், &nbsp;டம் ளர் உள்ளிட்ட பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை &nbsp;செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் &nbsp;வந்தது. இதை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட &nbsp;கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் &nbsp;உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மாசு கட்டுப்பாட்டு &nbsp;வாரிய பறக்கும் படையினர் சனியன்று ஆய்வு மேற்கொண்ட னர். &nbsp;இதில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற் கொண்டதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் &nbsp;பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது கண்டறி யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து &nbsp;சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்க ளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தனர். &nbsp;சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொது மக்களும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வரக்கூடிய நிலையில், வணிக நிறுவனங்களும் தங்கள் &nbsp;வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை வழங்க வேண்டும். துணிப் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் &nbsp;வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.