வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
22 Feb 2026, 3:26 pm
<p><strong>வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை</strong></p>
<p>பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்ச் பகு தியில் வசிப்பவர் சத்யவீர். வெல்டிங் வேலை செய்து வந்தார். வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. இத்தகைய சூழலில், அவ ரது 10 வயது மகன் கிரீஷுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட் டது. உ.பி., பாஜக அரசு கண்டுகொள்ளாத நிலையில், மருத்துவச் செலவுகளுக்கு சத்யவீர் பலரிடம் கடன் வாங்கி சமா ளித்துள்ளார். ஒரு பக்கம் வருமானம் இல்லை ; மறுபுறம் கடன் சுமை ஏறிக் கொண்டே சென்றது. இதனால் சத்யவீர் (45) அவரது மனைவி ராம்ஸ்ரீ (40), மகள் கள் பிராச்சி (14), ஆகான்ஷா (13) மற்றும் மகன் கிரீஷ் (10) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, சத்யவீரும் அவ ரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டில் பணவீக்கத்தால் வறுமை வாட்டி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற் கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
