ஹரியானாவில் மூடுபனி காரணமாக 40 வாகனங்கள் மோதல் பலர் படுகாயம்; போக்குவரத்து முடங்கியது
14 Dec 2025, 3:45 pm
<p><strong>ஹரியானாவில் மூடுபனி காரணமாக 40 வாகனங்கள் மோதல் பலர் படுகாயம்; போக்குவரத்து முடங்கியது</strong></p>
<p>சண்டிகர் நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் உறைபனி அளவிற்கு குளிர் இருப்பதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக் கின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலம், ரேவரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் ஞாயிறன்று காலை அடர்த்தி யான மூடுபனி காராணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பல வாக னங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும், பலர் படுகாயமடைந்த தாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகி லுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்திலும்... இதனிடையே, உத்தரப்பிரதேச மாநி லம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 91இல் ஞாயிறன்று காலை சுமார் 7க்கும் மேற்கொண்ட வாகனங்கள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்த னர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை என்று கிரேட்டர் நொய்டா காவல் துறை தெரிவித்தது. முடங்கியது போக்குவரத்து ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்க ளின் ஒரு சில இடங்களில் விபத்து காரண மாக சாலைப் போக்குவரத்து முடங்கியது. ஆனால் பெரும்பாலான இடங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தில்லி நெடுஞ்சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.</p>
