முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் ஓய்வறைகள்!

15 Nov 2025, 1:19 pm
தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் ஓய்வறைகள்!
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் ஓய்வறைகள்!</strong></p> <p><strong>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</strong></p> <p>சென்னை, நவ. 15 - தூய்மைப் பணியாளர் கள் செய்வது வேலையல்ல, சேவை என்றும், அவர் களை பாதுகாப்பது அர சின் கடமை என்றும் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இதனடிப்ப டையில், சென்னையில் 200 &nbsp;வார்டுகளிலும் தலா 300 &nbsp;சதுர அடியில் ஓய்வறைகள் &nbsp;கட்டப்படும் என்றும் முதல மைச்சர் அறிவித்துள்ளார். சென்னை கலைவா ணர் அரங்கில் மாநகராட்சி &nbsp;தூய்மைப் பணியாளர்க ளுக்கு 3 வேளையும் உணவு &nbsp;வழங்கும் திட்டம், குடியி ருப்பு வீடுகள் மற்றும் புதிய &nbsp;நலத்திட்டங்களை சனிக்கிழ மையன்று தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. &nbsp;ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது: வெயில், மழை, வெள் ளம் என எந்தப் பேரிடர் வந் &nbsp;தாலும் தூய்மைப் பணியா ளர்களின் பங்கு முக்கிய மானது. அவர்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளன. விடி யும் போது சென்னை நகரம் &nbsp;தூய்மையாக இருக்க தூய்மைப் பணியாளர்களே காரணம். அவர்களிடம் குப் பைகளை 100 சதவிகிதம் தரம் பிரித்து மக்கள் கொடுக்க வேண்டும். &nbsp; தூய்மைப் பணியாளர் களின் வாழ்க்கை மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் 200 வார்டுகளிலும் கழிப்பறை களுடன் 300 சதுர அடியில் &nbsp;ஓய்வு அறைகள் அமைக்கப் படும். அத்துடன் உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகள் உயர்கல்வி பெற்று அரசுப் &nbsp;பதவிகளைப் பெற வேண் டும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram