விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட 281 சத்துணவு பணியாளர்கள் கைது
20 Jan 2026, 2:46 pm
<p><strong>விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட 281 சத்துணவு பணியாளர்கள் கைது</strong></p>
<p>விருதுநகர், ஜன.20- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு, சத்துணவு ஊழி யர்களுக்கு கால முறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை தாங்கினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆண்கள் உள்பட 281 பேரை போலீசார் கைது செய்தனர்.</p>
