மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவிகள் கோரி 260 கோரிக்கை மனுக்கள்
29 Dec 2025, 3:24 pm
<p><strong>மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவிகள் கோரி 260 கோரிக்கை மனுக்கள்</strong></p>
<p>நாகர்கோவில், டிச.29- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 19 திங்களன்று நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொ கை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திற னாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 260 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) கு.சுகிதா, தனித்துணை ஆட்சி யர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.</p>
