25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி தேரி காட்டில் “மெழுகுப் புலி வண்டு”
22 Dec 2025, 2:53 pm
<p><strong>25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி தேரி காட்டில் “மெழுகுப் புலி வண்டு”</strong></p>
<p>தூத்துக்குடி, டிச. 22- 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டம் செம்மண் தேரி காட்டில் மிகவும் அரிதான மற்றும் அழியும் நிலையில் உள்ள ‘மெழுகுப் புலி வண்டு’ (Waxen Tiger Beetle) கண்டறியப்பட்டுள்ளது. இந்த மெழுகுப் புலி வண்டு தூத்துக்குடி யில் கடைசியாக 2000ஆம் ஆண்டு காணப்பட்டது. இத்தகைய சூழலில், 25 ஆண்டு களுக்குப் பிறகு குதிரைமொழி தேரி காட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வாளர்கள் கே.பி. அரவிந்தன் மற்றும் சாம்சன் கிருபாகரன் ஆகி யோரின் ஆய்வில் மெழுகுப் புலி வண்டு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பெங்களூரு தேசிய உயி ரியல் அறிவியல் மையத்தின் மாணவர் அரவிந்தன், நவம்பர் 19 அன்று குதிரை மொழி தேரி காட்டுப் பகுதியில் மெழு குப் புலி வண்டின் புகைப்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து டிசம்பர் 14 அன்று சாம்சன் கிருபாகரன் அருஞ் சுனை காத்த அய்யனார் கோவில் அருகே கண்டறிந்தார். இதுதொடர்பாக ஆய்வாளர் அர விந்தன் கூறுகையில்,”இந்த வண்டு மிக வேகமாக நகரக்கூடியது மற்றும் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இயல்புடையது. இது செம்மண்ணோடு ஒன்றிப்போகும் நிறத்தைக் கொண்டுள்ளது. இதன் உடல் செம்பு-சிவப்பு நிறத்திலும், இறக்கைப் பகுதி மெழுகு போன்ற பள பளப்பான மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தி லும் இருக்கும். மேலும், இதன் உட லில் ஐந்து தனித்துவமான கோபால்ட் நீல நிறப் புள்ளிகள் உள்ளன” என அவர் கூறினார். டைகர்பீட்டில்வாட்ச் நிறுவனர் வி.சரண் கூறுகையில்,”தேரி காட்டில் மெழுகுப் புலி வண்டு கண்டுபிடிப்பு புதிய மைல்கல் ஆகும். நாட்டில் வேக மாக மறைந்து வரும் கடலோர மணற்குன்று சுற்றுச்சூழல் அமைப்பு களைப் பாதுகாப்பதற்கான திட்டங் களை வலுப்படுத்த இந்த கண்டு பிடிப்பு ஒரு முக்கிய ஆதாரமாக அமையும்” என அவர் கூறினார். 1986 மற்றும் 2000-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட மெழுகுப் புலி வண்டு மாதிரிகள் ஜெர்மனியின் மியூ னிக் நகரில் உள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அக்டோபர் 2000க்குப் பிறகு மெழுகுப் புலி வண்டு எங்கும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>
