தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு
3 Jan 2026, 2:20 pm
<p>தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களையும் வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. இதனை வரவேற்று தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சனியன்று இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மா.கிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்தி ரன், ஜி.குணசேகரன், இளங்குமரன், பாலாஜி, ஆர்.ணிமேகலா, எம்.கலைச்செல்வி, ஏ.கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
