140 கிலோ கஞ்சா 2 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 பேர் கைது
17 May 2026, 11:55 pm
<p><strong>140 கிலோ கஞ்சா 2 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 பேர் கைது</strong></p><p>அம்பத்தூர், மே 16- ஆவடி, அயப்பாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 6 இளைஞர் களை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். </p><p>ஆவடி ஜெ.பி.எஸ்டேட் பகுதியில் ஆவடி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.</p><p> அப்போது அங்குள்ள வெற்றி நகரில் சந்தேகப்படும் படி வந்த 4 பேரை மடக்கி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். </p><p>அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரி வித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்த போது, 100 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. </p><p> இதையடுத்து 4 பேரையும் காவல் நிலை யம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாத் (21), கோபாலகிருஷ்ணன் (21), கோபி (19 ) என்பதும், இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. </p><p>மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.</p><p>பின்னர் 4 பேரையும் கைது செய்து, பூந்த மல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். </p><p>அதேபோல் ஆவடி- அயப்பாக்கம் சாலையில் உள்ள தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் அருகில் அயப்பாக்கம் காவல் துறையினர் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 2 பேரை மடங்கி சோதனை செய்தனர். </p><p>அப்போது அவர்கள் வைத்திருந்த பைகளில் 40 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. </p><p>தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தினர். </p><p>அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21), ருகேஷ் குமார் (19) என்பதும் தெரியவந்தது. </p><p>இதையடுத்து கஞ்சா, போதை மாத்திரை கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். </p><p>பின்னர் 2 பேரையும் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.</p>
