சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 12 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
27 Feb 2026, 5:32 pm
<p><strong>சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் 12 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு</strong></p>
<p>சிதம்பரம், பிப்.27- சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.96 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிந்த நிலையில் தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனை வரவேற்கும் விதமாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் நகர் மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசி ரியை கவிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் மேரி ஸ்டெல்லா, கல்வியாளர் ராகவேந்திரன், உறுப்பினர்கள் பச்சை யப்பன், ஹாஜா மொய்தீன், அப்துல் கபூர், உஷா உள்ளிட்ட அனைத்து ஆசி ரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
