ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்
27 May 2026, 8:16 pm
<p><strong>ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்</strong></p><p>குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.</p><p> ரகசியத் தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல்படை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு சரக்குக் கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். </p><p>அந்த மூட்டைகளில் 115 கிலோ எடையில் கொக்கைன் போதைப் பொ ருள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. </p><p> போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலையும் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். </p><p>விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 115 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>பாஜக ஆளும் குஜராத்தில் குறிப்பாக அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாஜக ஆளும் மாநிலம் போதைப்பொருட்களுக்கு நுழைவாயிலாக மாறிவிட்டது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. </p>
