தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

23 Feb 2026, 5:35 pm
சென்னை விரைவு செய்திகள்
<p><strong>100 நாள் வேலை 6 நாளான அவலம்: &nbsp;சிபிஎம் போராட்டம் அறிவிப்பு </strong></p> <p>விழுப்புரம், பிப்.23- விழுப்புரம் மாவட்டம் ஒட்டம்பட்டிலிருந்து அருணாபுரம் வழியாக வீரபாண்டி வரை நடை பயணம் சென்று கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் வீரப் பாண்டியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சி யின் சார்பில் 5ஆவது கட்டமாக நடைபயணம் நடைபெற உள்ளது. வீரப்பாண்டியில் தேசிய வங்கி கிளையை தொடங்க வேண்டும், தண்டரை&ndash;அடுக்கம் வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும், வீரப்பாண்டி &ndash; ஒட்டம்பட்டு &ndash; கண்டாச்சி புரம் சாலையை அகலப்படுத்த வேண்டும், அருணாபுரம் டி.எம். கால்வாயில் புலிக்கல் இணைப்பு சாலையை புதுப் பிக்க வேண்டும், தினசரி ஆற்று குடிநீர் வழுங்குவதை உறுதிப் படுத்த வேண்டும், புலிக்கல் கிராமத்தை புதிய ஊராட்சி யாக அறிவிக்க வேண்டும். வீரப்பாண்டியில் இடிக்கப்பட்ட தோழர்&zwnj; என்.மாரி &nbsp;சமூக கூடத்தை, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் மீண்டும் அமைக்க வேண்டும், அனைவருக்கும் 125 நாள் வேலைத் &nbsp;திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், இந்த வேலை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன &nbsp;கதையாக 100 நாள் வேலை தற்போது 6 நாள் வேலையாக இங்கு மாறி யுள்ளது. கூலி பாக்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் 122 என் சென்னை பேருந்து , டி-26 தண்டரை பேருந்து அதே வழித்தடத்தில் காலை, மாலை சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 5ஆவது கட்ட நடை பயணம் வரும் 25ஆம் தேதி காலை 9 மணிக்கு ஒட்டம்பட்டு முதல் அருணாபுரம் &ndash; வீரப்பாண்டி வரை நடைபெற்று அங்கு &nbsp;போராட்டம் நடைபெற உள்ளது என்றார்</p> <p><strong>மறியலில் ஈடுபட்ட வருவாய் ஊழியர்கள் கைது</strong></p> <p>அம்பத்தூர், பிப்.23- வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை நிறை வேற்றக்கோரி, கடந்த 19ஆம் தேதி முதல் தமிழகம் முழு வதும் வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக &nbsp;அம்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை காவல் &nbsp;துறையினர் கைது செய்தனர்.</p> <p><strong>வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு</strong></p> <p>வேலூர், பிப் 23 - இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தும் நீக்கியும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திங்க ளன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி அனைத்து அங்கீகரிக் கப்பட்ட அரசு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில், (43) வேலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;1,01,554பேரும் பெண் வாக்காளர்கள் 1,09,460 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 49 ஆக மொத்தம் 2,11,063 பேரும், (40) காட்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;1,08,863 பேரும், பெண் வாக்கா ளர்கள் 1,16,914 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 32 ஆக &nbsp;மொத்தம் 2,25,809 பேரும், (44) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;1,13,833 பேரும் பெண் வாக்காளர்கள் 1,20, 863 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 42 ஆக மொத்தம் 2,34,738 பேரும்,(45) கீழ்வைத்தியணான் குப்பம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;1,04,458 பேரும் பெண் வாக்காளர்கள் 1,08,985 பேரும் மூன்றாம் பாலி னத்தவர் &nbsp;8 ஆக மொத்தம் 2,13,451 பேரும், (46) குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் &nbsp;1,20,946 பேரும் பெண் வாக்காளர்கள் 1,27, 547 பேரும் மூன்றாம் பாலினத் தவர் 33 ஆக மொத்தம் 2,48,526 பேரும் என மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 549 654 ஆண் வாக்காளர்களும் 583 769 பெண் வாக்காளர்களும் 164 மூன்றாம் பாலினத்தவரும் சேர்த்து மொத்தமாக 11 லட்சத்து 33 ஆயிரத்து 587 வாக்கா ளர்கள் உள்ளனர். இந்த பட்டியல் 1,427 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 676 வாக்குச்சாவடி மையங்களில் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் உதவி அலுவலர்களின் அலுவல கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் தொடர் திருத்த முறை மேற்கொள்ளப்படுவதால் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள படிவங்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு &nbsp;அலுவலகங்களில் நேரடியாகவும், www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p> <p><strong>மறியலில் ஈடுபட்ட வருவாய் ஊழியர்கள் கைது</strong></p> <p>அம்பத்தூர், பிப்.23- வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை நிறை வேற்றக்கோரி, கடந்த 19ஆம் தேதி முதல் தமிழகம் முழு வதும் வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக &nbsp;அம்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை காவல் &nbsp;துறையினர் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.