தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

6 Dec 2025, 2:48 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>10 சதவிகிதம் கூடுதல் மழை</strong></p> <p>சென்னை: தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 379.3 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி வரை 416.1 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இயல்பை விட 1 சத விகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு &nbsp;மையம் தெரிவித்து உள்ளது.</p> <p><strong>டிச.12 வரை &nbsp;மிதமான மழை</strong></p> <p>சென்னை: தெற்கு கேரள கடலோரப் பகுதி கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரண மாக டிசம்பர் 7 முதல் 12ஆம் தேதி வரை தமி ழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசா னது முதல் மிதமான &nbsp;மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது.</p> <p><strong>&nbsp;அன்புமணி மீது போலீசில் புகார் </strong></p> <p>சென்னை: தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து &nbsp;கட்சியை அபகரித்து உள்ளதால் குற்ற வியல் வழக்கு பதிய வேண்டுமென்று அன்பு மணி ராமதாஸ் மீது தில்லி போலீசில் ராம தாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ-வான ஜி.கே. &nbsp;மணி புகார் அளித்து உள்ளார். &nbsp;</p> <p><strong>மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்யலாம்</strong></p> <p>&nbsp;திண்டுக்கல்: மகளிர் &nbsp;உரிமைத் தொகை கோரி 29 லட்சம் விண் ணப்பங்கள் வந்துள்ள தாகவும், தகுதி &nbsp;இருந்தும் இம்மாதம் 12-ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் கோட்டாட்சி யரிடம் மேல்முறையீடு செய்யலாம் என உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச் சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.</p> <p><strong>பாஜகவின் கிளை அலுவலகமானது அதிமுக!</strong></p> <p>சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக தற்போது பாஜக வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது என துணை &nbsp;முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். &nbsp;அதிமுகவில் தற்போது அண்ணாவும் இல்லை, முன் னேற்றமும் இல்லை. பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார். &nbsp;அதிமுகவை அமித் ஷாகுத்தகை எடுத்து அவரது கண்ட்ரோ லில் வைத்துள்ளார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p> <p><strong>டிச. 11 விசைத்தறி தொழிலாளர்கள் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் &nbsp;</strong></p> <p>மதுரை, டிச. 6 - தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளர் மாநில சம்மேளனக்குழு கூட்டம், திருப்பரங்குன்றம் கே.பி. ஜானகியம்மாள் நினைவரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. &nbsp;இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆர். சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம். &nbsp;சந்திரன், சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் பி. &nbsp;முத்துசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் &nbsp; பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடும்பங்களின் பிரதான வருவாய் ஆதாரம் விசைத்தறி தொழிலே ஆகும். &nbsp;கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த 19.11.2025 &nbsp;முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். 17 நாட்களாக வருமானமின்றி போராடி வரும் &nbsp;விசைத்தறி தொழிலாளர்களின் நிலைமை மிகக்கடுமையாக உள்ளது. எனவே, தொழிலாளர்கள் முன்வைத்த நியாய மான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண &nbsp;தமிழக அரசு மற்றும் தொழிலாளர் துறை அவசர தலையீடு &nbsp;செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றி அமலாக்கி வரும் ஒன்றிய அரசை கூட்டம் கடுமையாக கண்டித்தது. போராடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் கூலி உயர்வு வழங்கக்கோரியும் டிசம்பர் &nbsp;11 &nbsp;அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் விசைத்தறி தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கி ணைந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.