சென்னையில் தலைமைச்செயலகம் முன்பு இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தலைமை செயலகம் அவுட் கேட் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சிவராஜ் என்பது தெரியவந்துள்ளது.