tamilnadu

img

எஸ்.வி.சேகருக்கு மானம் ரோசம் இருக்கிறதா?: ஜெயக்குமார் கேள்வி

சென்னை:
மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கும் மும் மொழிக் கொள்கையை கடைபிடிக்க மாட்டோம் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் வரவேற்பதோடு பாராட்டு தெரிவித்தனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகர், “அதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங் கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது” என்று கூறியிருந்தார்.

நடிகர் எஸ்வி சேகருக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ’எஸ்வி சேகர் மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்எல்ஏ வாக அவர் ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்ஷனை திருப்பித் தரவேண்டும், தருவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.  அமைச்சரின் இந்த கேள்விக்கு எஸ்.வி. சேகரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை.

;