tamilnadu

img

காணொலி மருத்துவ ஆலோசனையால் 6,471 நபர்கள் பயனடைந்துள்ளனர்....

சென்னை:
கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான ‘இ-சஞ்சீவனிஓபிடி’ மூலம்  இதுவரை 6,471 நபர்கள் பயனடைந்துள்ளனர் என, தமிழக மக் கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழனன்று  (ஜூலை 16) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட் டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாகச் சந்திக்க இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால்  மே மாதம் 13-ம் தேதி ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது.இச்சேவையைப் பயன்படுத்த esanjeevaniopd.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து தங்கள் கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் பயன்படுத்தி மருத்துவரைச் சந்திப்பதற்கான சீட்டு எண்ணைப் பெறலாம்.இதனையடுத்து, மருத்துவரைச் சந்திப்பதற்கான பிரிவில் நுழைந்து, காத்திருப்பு அறை திரையில் ‘தற்போது அழைக்கவும்’ என்று வரும்பொழுது அந்த உள்ளீட்டை அழுத்தினால் மருத் துவருடன் தொடர்புகொண்டு காணொலிக் காட்சி மூலம் மருத் வவ ஆலோசனை பெறலாம்.மேலும், மருத்துவரின் மின்னணுப் பரிந்துரைச் சீட்டு கைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் இத்திட்டத்தில் பொதுமக்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெறலாம்.தமிழ்நாடு அரசு உரிய பயிற்சிக்குப் பின்னர் 617 அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தி இச்சேவையை வழங்கி வருகிறது. அடுத்தகட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 6,471 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;