world

img

புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் போலியானது - டிரம்ப்

புளோரிடா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் போலியானது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும் தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.  புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் போலியானது என்றும், அமெரிக்காவில் சட்டங்களை அமல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். 

2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக, அடுத்த தேர்தலில் தோற்கடிக்க தனக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் டிரம்ப் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2-வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப்,  ஜனநாயக கட்சியின் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது

;