what-they-told

img

காலநிலை மாற்றத்தால் பூமியில் அவசர நிலை

11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை; சில பகுதிகள்  வாழத் தகுதியற்றதாகவே மாறும் அபாயம்

புதுதில்லி,நவ.7- பருவநிலை மாற்றத்தால் பூமியில் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.     பூமி வெப்பமயமாகுதல், பனிப்பாறைகள் உருகுதல், காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு கள் உருவாகிறது என்று விஞ்ஞானி கள் தெரிவித்து வருகிறார்கள். பருவ நிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகளில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 2015 ஆம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில்  பருவ நிலை மாற்ற பாதிப்பு களை தடுக்கும் வகையில் மிக முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டன.  ஆனால் இதில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்ற ஒப்பந்த த்தை பல நாடுகள் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த நிலையில் உலகம் முழு வதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயோ-சயின்ஸ் இதழில் பருவநிலை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை 153 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 258 விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 69 விஞ்ஞானிகளும் கையெழுத்திட்டு ள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த எரிபொருள் பயன்பாடு, காடு கள் அழிப்பு, கார்பன் வெளியேற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, பூமி வெப்பமயமாகுதல், பனி பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, பிறப்பு  விகிதம் உள்ளிட்டவற்றை அடிப்படை யாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் தாமஸ் நியூசம் கூறுகையில்,  கார்பன் வெளியேற்றத் தை குறைக்கவில்லை என்றாலும், எரி பொருள் தேவைக்காக நிலங்களை அழிப்பதை நிறுத்தவில்லை என்றாலும் இப்போதுள்ள நிலைமையை விட மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். பூமியின் சில பகுதிகள் மக்கள் வாழ தகுதியற்றதாகவே மாறி விடும் என்றார். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை யை எடுக்க வேண்டும். இல்லையெ னில் கற்பனை செய்ய முடியாத, சொல்ல முடியாத பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். பருவநிலை பாதிப்புகளின் தீவிரத்தை உலகுக்கு சொல்லுவது விஞ்ஞானிகளின் கடமை. அதை ஆய்வறிக்கை மூலம் செய்துள்ளோம் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் புவிவெப்பமயம், பசுமை இல்லாத வாயுக்கள் வெளி யேற்றம் உள்ளிட்டவைகளின் அளவு அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதை படிவ எரிபொருள் பயன் பாட்டை தடுக்க வேண்டும். புதுப்பிக்கத் தக்க எரிபொருள் பயன்பாட்டை அதி கரிக்க வேண்டும். காடுகளின் பரப்பை  அதிகரிக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சதுப்பு நில காடு களை அழிவில் இருந்து காக்க  வேண்டும் என்று பருவ நிலை மாற்றத் தை தடுக்க சில நடவடிக்கைகள் ஆய் வறிக்கையில்  விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.  இந்த நிலையில்தான் உலகம் முழுவதும் பருவ நிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருப்பது முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. 

;