tamilnadu

img

பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்....  இந்திய ராணுவ வீரர் மரணம்

ஸ்ரீநகர்
கொரோனா பதற்றத்துக்கிடையே பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி வருகிறது. சில சமயங்களில் அந்நாட்டு வீரர்கள் திடீரென தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு மீண்டும் ஊடுருவியது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டு அமைப்பு (எல்.ஓ.சி) நடத்திய இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக ரஜோரி மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் கோஹ்லி கூறியுள்ளார். வீரமரணம் அடைந்த இந்திய வீரர்  ராஜதானி கிராமத்தைச் சேர்ந்த நயம்துல்லா (35) என்பது தெரிய வந்தது.  

;