tamilnadu

img

அமைச்சர் வேலுமணி அதிகார அத்துமீறல்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஏப்.24- காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார  அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை வன்மையாக கண்டித்துள்ள திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், ஜனநாயக விரோத நடவ டிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும்  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றினால் பொதுமக்க ளும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில்,  அவர்களைப் பாதுகாக்கும் பணி யில் போதிய கவனம் செலுத்தாமல், ஊட கத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுக ளில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து ஈடு பட்டுவருவது  கண்டனத்திற்குரியது.

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலை பார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை  அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்ப டுவதில்லை என்பதில் தொடங்கி, கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெற வில்லை என்பதையும், கோவை மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்  சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்ப தையும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சுட்டிக்காட்டியதை, “சிம்ப்ளிசிட்டி” இணைய இதழ் வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பத்திரிகை யாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி இரு வரையும் விசாரணை என்ற பெயரில் காவல்  துறை யினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்ததும், அதன்பின்னர் இரவு நேரத்தில் சிம்பிளிசிட்டி பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் சட்ட விரோத செயல் பாடாகும்ஆணவ அதிகாரத்  தின் வெளிப்பாடாகும்.

ஊடகத்தினர்  மீது வன்மம்  கொண்டு, ஏற்க னவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்  பட்ட நிலையில், தற்போது  முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலு மணியும் காவல் துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடு வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக  விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, சிம்பிளிசிட்டி பதிப்பாளரை விடு வித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திர மாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தி ருக்கிறார்.

;