tamilnadu

img

அன்புஜோதி காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை -தேசிய மகளிர் ஆணையம்

அன்பு ஜோதி காப்பகத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தில் பெண்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்துவதாகவும் சிலரை காணவில்லை எனவும் எழுந்த புகாரில் ஏற்கனவெ 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் தற்போது தேசிய மகளிர் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு முழு அறிக்கை சமர்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளர்.
 

;