tamilnadu

img

விலையில்லா மிதிவண்டி தொடரும்: அரசு அறிவிப்பு

சென்னை,ஜூலை 31- 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாண வர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி  உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயி லும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த  மாணவர்களுக்கு பொருளாதார உச்சவ ரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள்  வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டிலும்  11 ஆம் வகுப்பு  பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாண வர்களுக்கும் தொடர்ந்து விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படும். இத்திட்டம் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்  படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;