tamilnadu

img

மேட்டுப்பாளையத்தில் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு

மேட்டுப்பாளையம், ஏப்.10-மேட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா புதனன்று மேட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசை நீக்கிவிட்டு புதிய மதச்சார்பற்ற அரசை அமையவும், மாநிலத்தில் உள்ள ஊழல் நிறைந்த எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்றி விட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையவும் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், நான் ஏற்கனவே இத்தொகுதியின் நாடாளுமன்றஉறுப்பினராக பணியாற்றியுள்ளேன். கடந்த முறையை காட்டிலும் இம்முறை மேலும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் வேட்பாளர் ஆ.ராசா சென்ற ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மேள தாளத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

;