tamilnadu

நீட் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க உத்தரவு

மதுரை:
நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் இருவர் தங்களின் உண்மைச் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில் தேனிநீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனசென்னை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, ரிஷிகாந்த் ஆகியோர் கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு தற் போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா சென்னைஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில்,” கடந்தாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடிகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,குற்றவாளியாக சேர்த்து விசாரித்தனர். இந்த வழக்கில் பல்வேறு மாணவர்களும், பெற்றோர்களும் சேர்க்கப்பட்டனர். பல் வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி நான் ஜாமீனில் உள்ளேன். இந்த வழக்கு விசாரணையின் போது எனது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்று, சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது நீதித் துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக் கப்பட்டுள்ளது.எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேரச் சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களை கேட்கின்றனர்.

எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றதயாராக உள்ளேன்”எனக் கூறியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற் றொரு மாணவரான ரிஷவந்த் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்கள் திங்களன்று நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு “தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்உரிய ஆவணங்களை ஒப்படைத்து பத்தாம்மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மாற்றுச் சான்றிதழை தேனி மருத்துவக் கல்லூரி வழங்கும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம். இல்லை என்றால் வழக்கு முடிந்தபிறகு பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிஉத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

;