tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் பக்கம் ... நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள் பக்கம்...

மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், தமுகஎச தலைவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம் வரவேற்றார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் திரைக் கலைஞருமான ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் கரு.பழனியப்பன், கோபி நயினார், ராஜூமுருகன், லெனின்பாரதி, பாடலாசிரியர் யுகபாரதி, கவிஞர் நந்தலாலா, மருத்துவர் கு.சிவராமன், நடிகர் பூ ராமு உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார், நாகர்கோவில் முரசு குழுவினரின் தப்பாட்டம், கரிசல்குயில் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி உள்ளிட்டோரின் பாடல்கள் இடம்பெற்றன. நிறைவாக வேட்பாளர் சு.வெங்கடேசன் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றினார். நிகழ்ச்சிகளை மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் ஒருங்கிணைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து படைப்பாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கில் நிகழ்ச்சியில் சங்கமித்து இருந்தனர்.

;