tamilnadu

img

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

ஹாங்காங் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 

ஹாங்காங்கில் யோனெக்ஸ் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.  ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. எனினும் முதல் செட்டின் நடுப்பகுதியில் சற்று சுதாரித்து விளையாடிய ஸ்ரீகாந்த் அந்த செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட் ஆரம்பிக்கும் தருணத்தில் காயம் காரணமாக விலகுவதாக  சென் லாங் அறிவிக்க அதிர்ஷ்ட வாய்ப்புடன் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஏற்கெனவே ஸ்ரீகாந்த் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான கென்டோ மொமோடா காயம் காரணமாக விலகியதால் விளையாடாமல் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் போன்ற பிரிவுகளில் இந்திய வீரர் -வீராங்கனைகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;