tamilnadu

img

தகர டப்பாவை ஓங்கி அடித்தால் வெட்டுக்கிளிகள் ஓடிவிடும்!

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி, லலித்பூர், ஆக்ரா, மதுரா, ஷாம்லி, முசாபர் நகர், பக்பாட், ஹமிர்பூர், மஹோபா, பண்டா, சித்ரகூட், ஜலாவுன், எட்டாவா, சோன்பத்ரா, மிர்ஸாபூர், சந்தெளலி மற்றும் கான்பூர் டெஹாட் ஆகிய 17 மாவட்டங்கள் வெட்டுக்கிளி அபாயத்தில் இருக்கின்றன.

இந்நிலையில், பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, தகர டப்பா, பாத்திரங்களைத் தட்டுமாறு அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.வெட்டுக்கிளிகளை விரட்டுவது தொடர்பாக வேளாண்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில்தான் முதல்வர் ஆதித்யநாத் இதனை தெரிவித்துள்ளார்.“வெட்டுக் கிளிகளைப் பொறுத்தவரை, சத்தத்தைக் கேட்டால், அவைகள் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும் என்று அரசுத் தரப்பில் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. எனவே, வெட்டுக்கிளிகள் நாசம் செய்யும் இடத்தில்முடிந்தளவு ஒலி எழுப்பி அவற்றை விரட்டுமாறுநாங்கள் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்;டிரம்ஸ், டின்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஓங்கிஅடித்து சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளோம்” என்று வேளாண்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

;