tamilnadu

img

முன்னாள் பிரதமருக்கும் மதிப்பில்லை

புதுதில்லி, நவ.9- காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரி யங்கா காந்தி ஆகியோ ருக்கான எஸ்.பி.ஜி (Special Protection Group)பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 5-ஆம் தேதி மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படு கிறது. ஆனால், பத்தாண் டுகள் நாட்டை ஆண்ட ஒரு முன்னாள் பிரதமரின் கடி தத்திற்கு முறைப்படியான பதிலைக் கூட அளிக்கா மல், ஒருதலைப்பட்சமாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதாக, காங்கி ரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

;