tamilnadu

img

‘எஸ்டிசி, எம்எம்டிசி, பிஇசி’....பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா!

புதுதில்லி:
பொதுத்துறை வர்த்தக நிறுவனங்களான ‘எஸ்டிசி, எம்எம்டிசி, பிஇசி’ ஆகிய மூன்று நிறுவனங்களையும் மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ‘ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்’ (எஸ்டிசி) என்ற நிறுவனம் 1956-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரயில்வே மற்றும்பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக புராஜெக்ட் மற்றும் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் (பிஇசி) என்ற நிறுவனம் எஸ்டிசி-யின் ஒரு அங்கமாக 1971-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1997-ஆம்ஆண்டு இந்நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது.இதற்கிடையே உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்று தனியாக ‘எம்எம்டிசி’ என்று நிறுவனம் 1963-ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட 3 நிறுவனங்களின் பயன்பாடும் தற்போது குறைந்து விட்டதாக கூறி, அவற்றுக்கு மூடுவிழா நடத்துவது, அல்லது மூன்றையும் ஒரே நிறுவனமாக மாற்றுவது என்று முடிவுக்கு மோடி அரசு வந்துள்ளது.‘இந்த நிறுவனங்களுக்கானத் தேவை இப்போது இல்லை. வெறும் தங்கம் இறக்குமதிக்காக மட்டும் ‘எம்எம்டிசி’ போன்ற பெரிய நிறுவனங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்லாமல், இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையும் அல்ல. இப்போதைய நிலையில் அரசின்முன்பு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இம்மூன்றுநிறுவனங்களையும் மூடுவது அல்லது இம்மூன்றையும் ஒன்றாக இணைப்பது. இதுகுறித்து கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் திட்டவட்டமான முடிவுஅறிவிக்கப்படும்’ என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

;