tamilnadu

img

தெலுங்கானாவில் அதிர்ச்சி... ஒரே நாளில் 23 பத்திரிகையாளருக்கு கொரோனா பாதிப்பு...   

ஹைதராபாத் 
ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிந்த மாநிலமான தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 185 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 2,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 237 பத்திரிகையாளருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 60 பத்திரிகையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;