tamilnadu

img

‘சென்சஸ்’ கணக்கெடுப்பை ஒத்தி வைத்திடுக: சிபிஎம்

புதுதில்லி, மார்ச் 19- கொரானோ வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அதற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதால், சென்சஸ் கணக்கெடுப்பை (மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஏப்ரல் 1 தொடங்காமல் ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரானோ வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, மக்கள் சமூகத்தில் ஒருவருக்கொருவர் நெருங்காமல் தனித்திருக்க வேண்டியது போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டி ருக்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு ஏப்ரல் 1 முதல் தொடங்குவதாக அறிவித்த தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பை அரசு கைவிட வேண்டும் என்று உறுதியுடன் கருதுகிறது. அரசாங்க மும் அதன் அனைத்து அமைப்புகளும் ஒரே குறிக்கோளுடன் இந்தத் தொற்று நோயைக் கட்டுப் படுத்திடுவதில் கவனம் செலுத்த வேண்டும், அதன் மூலம் மக்களின் நலனுக்கும் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா அச்சத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். 

ஏற்கனவே 13 மாநில அரசாங்கங்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடைமுறைக்குத் தங்கள் எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கின்றன. சென்சஸ் கணக்கெடு ப்பையும் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஒத்தி வைத்திட வேண்டும். பிரதமர், மிகவும் விளம்பரப்படுத்தி, மார்ச் 19 இரவு 8 மணிக்கு ஒளி பரப்பவுள்ள  தமது உரையில் இதனை அறிவித்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

(ந.நி.)

;