tamilnadu

img

மாநிலங்களவை மார்ஷல்களின் ராணுவ சீருடைக்கு எதிர்ப்பு

மறுபரிசீலனை செய்ய உத்தரவு

புதுதில்லி,நவ.19- நாடாளுமன்ற மாநிலங்களவையில் காவல் பணியில் உள்ள மார்ஷல்களுக்கு, ராணுவ உடை போன்ற சீருடை வழங்கப் பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநிலங்களவைத் தலைவருக்கு அருகே காவல் பணியில் நிற்கும் மார்ஷல்கள் வழக்க மாக குர்தா மற்றும் தலைப்பாகை அணிந்திருப்பர். ஆனால் திடீரென்று அவர் களின் சீருடை தற்போது மாற்றப்பட்டு, ராணுவ உடை போன்ற சீருடையும், தொப்பியும் வழங்கப்பட்டுள்ளது. ராணுவப் பிரிவில் இல்லாதவர்கள், ராணுவ உடை போன்ற தோற்றத்தில் ஆடை அணிவது சட்டவிரோதமானது என்று முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அதிருப்தியும்,எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை தொடர்ந்து மார்ஷல்களின் சீருடையை மறுபரிசீலனை செய்ய மாநிலங்களவைச் செயலாளருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
 

;