tamilnadu

img

‘மேக் இன் இந்தியா’  பேச்சளவில்தான் இருக்கிறது... விமானப்படை தளபதி அதிரடி

புதுதில்லி:
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, தொலைக்காட்சி நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, “எல்லாவற்றையும் உள்நாட் டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தியை பொறுத்தவரை, இந்த திட்டம் வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது” என்று கூறியுள்ள பதாரியா, “நமது நோக்கம் நல்லதுதான். ஆனால், நடைமுறையில் பணிகள் மிகவும் மெதுவாக நடக்கின்றன. எல்லாஅமைப்புகளும், நிறுவனங்களும் இந்த திசையில் செயல் பட்டால், நமக்கு எப்படி வெற்றி கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

;