tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை விரட்டியடிக்க சூளுரைப்போம்

சிபிஎம் ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரிய பெருமக்கள் அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அறப்பணியாகவும், உன்னதமான மனிதகுல சேவையாகவும் கருதப்படு கிற ஆசிரியப் பணி என்பது புதிய சமு தாயத்தை உருவாக்குகிற மகத்தான பணியாகும். கல்வி ஒருகாலத்தில் சாதியின் பெயரால் மறுக்கப்பட்டது. இன்றைக்கு பணத்தின் பெயரால் மறுக்கப்படும் சூழல் உருவாக்கப்படு கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்தியக் கல்வித் துறையையும் முழுமையாக வணிக மயமாக்குதல், கல்வி அதிகாரங்களை மத்திய அரசிடம் குவித்தல், பாடத் திட்டங்களில் மதவெறியை புகுத்து தல் என கொடிய நோக்கங்களை செயல் படுத்த மத்திய அரசு துடிக்கிறது. இந்த சவால்களை முறியடிக்க ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் ஒன்றிணைந்து மதச்சார்பற்ற, பொதுக்கல்வியை அனைவருக்கும் உறுதிசெய்ய ஆசிரி யர் தினத்தில் சூளுரைப்போம்.

கே.பாலகிருஷ்ணன், 
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;